8 வீடுகள் எரிந்து நாசம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி
திருவள்ளூர், 

 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி அருந்ததிபுரம்  பகுதியில் பாலாஜி, சத்யா, சூர்யா, ராஜா, வெங்கடேசன், சந்திரன், கோபி, சுரேஷ் உள்ளிட்ட 8 பேர்களின் வீடுகளில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது.


 



இதில், வீடுகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகின. இந்தநிலையில் தீ விபத்தால் வீடுகளை இழந்த குடும்பத்தினரை அ.தி.மு.க. கடம்பத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா சுதாகர், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் கே.சுதாகர் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து அரிசி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

 

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் துணை தாசில்தார் வெங்கடேஷ், வருவாய் ஆய்வாளர் சொர்ணலதா, ஒன்றிய அவைத்தலைவர் இன்பநாதன், கூவம் சரவணன், மாவட்ட பிரதிநிதிகள் அழிஞ்சிவாக்கம் பாசூரான், கண்ணூர் சீனிவாசன், சின்னா கீழச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் தேவி கலா தேவா, துணைத்தலைவர் சந்தோஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.




Popular posts
3 நாள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்வு: தங்கம் சவரன் 31,000ஐ தாண்டியது: நேற்று ஒரே நாளில் 216 அதிகரிப்பு
Image
ஆம்பூரில் 144தடை உத்தரவை பின்பற்றாத பல்பொருள் அங்காடி மற்றும் தேநீர் கடைகளுக்கு சீல் வட்டாட்சியர் நடவடிக்கை
Image
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் அவர்கள் 24 மணி நேரத்தில் நேதாஜி நகர் வாழ் பொதுமக்களுக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுத்தார்
Image
சென்னை சில்க்ஸ்: கும்பகோணத்தில் உள்ள தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை நிறுவனம் சார்பில் நகராட்சி அம்மா உணவகத்திற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கினர்
Image