தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கிரிமிநாசினி தெளிப்பான் அரங்கம் அமைக்கப்பட்டது

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கிரிமிநாசினி தெளிப்பான் அரங்கம் அமைக்கப்பட்டது.


கொரானா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருவதால், ஒவ்வொருவரும் முகக்கவசம், கையுறை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் என ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். மருத்துவமனைக்கு வந்து விட்டு வெளியில் செல்பவர்கள் உடலில் இருக்கும் நோய்த் தொற்று கிருமிகளை அழிக்கும் வண்ணம், உடல் முழுவதும் கிரிமி நாசினி மருந்து படவேண்டும் என்ற நோக்கததில் மருத்துவமனை வெளிப்புற வாயிலில் கிரிமி நாசினி தெளிப்பான் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. வெளியில் செல்பவர்கள் அனைவரையும் அந்த அரங்கம் வழியாக வெளியேறும் வகையில் கண்காணிப்புக்கு காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். தஞ்சை மாநகரத்தில் அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என நான்கு இடங்களில் கிரிமி நாசினி தெளிப்பான் அரங்கம் அமைக்கப்பட்டு உளளது.


" alt="" aria-hidden="true" />


Popular posts
ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு மத்திய அரசு சலுகை - தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடும் கண்டனம்
ஆம்பூரில் 144தடை உத்தரவை பின்பற்றாத பல்பொருள் அங்காடி மற்றும் தேநீர் கடைகளுக்கு சீல் வட்டாட்சியர் நடவடிக்கை
Image
மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பீர்!* *முஸ்லிம் சமுதாய மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள்!!!*
Image
3 நாள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்வு: தங்கம் சவரன் 31,000ஐ தாண்டியது: நேற்று ஒரே நாளில் 216 அதிகரிப்பு
Image